புதன், 3 டிசம்பர், 2008

அன்பார்ந்த வலைத்தள நேயர்களே !
உங்களனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழில் எண்ணற்ற வலைத்தளங்கள் இருந்தாலும் நமது இந்த வலைத்தளம் இந்திய - இலங்கை இணைப்புதளமாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய - இலங்கை என பொத்தாம் பொதுவாக சொல்வதை விட தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாகிய தமிழக - இலங்கை தமிழ் பேசும் மக்களின் சமூக பண்பாட்டு அரசியல் தளங்களை பேசும் இணைக்கும் உறவுப்பாலமாக விளங்க வேண்டும் என்பதே எம் நோக்கம்.
நேயர்கள் தங்களது ஆக்கங்களை செய்திகள் கட்டுரைகள் திறனாய்வு கட்டுரைகள் நூல் திரை அறிமுகங்கள் & விமர்சனங்கள் கவிதைகள் என பதிவு செய்யலாம்.
உடன்பாடான, மறுப்பான விவாதங்களும் ஆக்கங்கள் மீதான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
நேயர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!
கருத்து சுதந்திரத்தையும் கூர்மையான காரசாரமான ஆக்கங்களையும் விமர்சனங்களையும் நாம் வரவேற்கும் அதே வேளையில் ஒழுக்க விழுமியங்களை சிதைக்கின்ற ஆக்கங்களை தவிர்க்குமாறு பணிவாய் வேண்டுகிறோம்.
எம்மை தொடர்பு கொள்ள
ratnamraja83@yahoo.com

2 கருத்துகள்:

MUJAHID சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
poompunal சொன்னது…

தமிழீழமும் தமிழகமும்


‘பூம்புணல்’ வலைப்பூ மிக அருமையாக உள்ளது. ஜெயமோகனுக்கு அளிக்கப்பட்டுள்ள எதிர்வினை மிக அருமை! சில இடங்களில் வார்த்தைகளின் கடுமையைக் குறைத்திருக்கலாம்.
தமிழகத்தில் இன்று தமிழீழம் குறித்துப் பேசும் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். வெளிப்படையாக ஈழத்தில் பாதிக்கப்படுவோர் ‘இந்துக்கள்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். ஹிந்துத்துவாவும் தமிழீழமும் தமிழ்த் தேசியமும் கைகோர்க்கும் அபாய மேகம் சூழ்ந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் தலைமையில் ஒரு குழு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்து, போர் நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
இதை ஃபாசிஸ இந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் சமூக நல ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கருத்தியலாளர்கள் அனைவரும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். விடுதலைப்புலிகளை காக்கவே அரசியல் தலைவர்கள் கூக்குரலிடுவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்த அபாயம் பெரியார் பிறந்த இம்மண்ணில் தடம் பதியாமல் காப்பது ஃபாசிஸத்தை எதிர்க்கும் ஒவ்வொரு சமூக நல ஆர்வலர்களின் கடமையாகும். இது குறித்த தெரிவான படைப்புகள் தகுந்த தரவுகளுடனும் வரலாற்றுப் பின்னணியுடனும் பூம்புணலில் வெளிக்கொணர வேண்டும் என விரும்புகிறேன்.
வாழ்த்துகளுடன்
தமிழ்க் குடிமகன்
மதுரை