சனி, 27 டிசம்பர், 2008

பண்டிகைகளே பதற்றமாய்....

குஜராத்துக்கு அடுத்ததாக இனசுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகுந்த அச்சத்திற்கிடையே நடைபெற்றது. கொண்டாட்டங்கள் என்பன மனிதனின் அன்றாட வாழ்வியல் சலிப்புகளிலிருந்து அவனை மீட்டு புத்துணர்வையும் , தான் வாழும் சமூகத்தில் தன்னுடன் சேர்ந்து பயணிக்கும் பிற சமூகத்திரளினருக்கு தன்னுடைய உற்சாக வெளிப்பாட்டை அனுபவிக்கவும் பகிர்ந்துகொள்வதர்க்கான ஒரு தளமாகும்.
ஆனால் ஒரிசா வாழ் கிறிஸ்தவர்களுக்கோ வேறுமாதிரியான அனுபவம். அரசின் கணக்குப்படி எண்ணாயிரம் கிறிஸ்தவர்கள் அகதி முகாமில் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட முன்னூறு கிறிஸ்தவ கிராமங்கள் இன சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பெரு விழாவிற்கான டிசம்பர் ௨௫ ஆம் தேதியும் நெருங்க நெருங்க ஒரு வகையான பதற்றம் ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்ட கிறிஸ்தவர்களை தொற்றிட தொடங்கியது. சங் பரிவாரத்தினர் கிறிஸ்தமஸ் அன்று கலவரம் செய்வோம் என மிரட்ட மகிழ்ச்சிப்பெருக்கின் நாளான கிறிஸ்துமசை நினைத்தாலே அடி வயிறு கலங்க ,நெஞ்சுக்கூட்டினுள் பயப்பீதி பரவ இருந்த நிம்மதியும் தொலைந்து போனது கந்தமால் வாழ கிறிஸ்தவர்களுக்கு.
சுவாமி லட்சுமானந்தா என்ற பாசிச அடியாள் மாவோ போராளிகளின் கைகளினால் பரம பதம் அடைந்திட்டப்போது அதற்கான விலையை கொடுத்தனர் அதனுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத கிறிஸ்துவர்கள் .கொலை.கொள்ளை,பாலியல் வன்புணர்ச்சி, சூறையாடல் ,துரத்தப்படல் என ஊழித்தாண்டவம் ஆடியது பாசிசம். சர்வ வல்லமை படைத்த ,அணு ஆயுத திறனுட்ய ,பிராந்திய வல்லரசு என்ற பட்டப்பெயருடைய பாரத திரு நாட்டின் நடுவணரசு வேடிக்கைப்பார்க்க பல நாட்கள் பற்றி எரிந்தது கந்தமால்.
அந்த ஊழித்தாண்டவ நாட்கள் நெஞ்சிலாட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடுவணரசின் ஆயுத படையினர் +பாசிஸ்டுகளின் கூட்டாக கண்காணிக்க ,உருட்டல் மிரட்டல் விழிகளின் தயவில் ஏசுபிரானை நினைவு கூர்ந்தனர் அவரின் பாவப்பட்ட மந்தைகள்.
இந்தியாவின் சாபக்கேடான சாதீய கட்டுமானத்தினாலும் ,இந்நாட்டை ஆண்ட ,ஆளும் கொள்ளை கூட்டத்தினாலும் அற்ப புழு போன்று அழுத்தி, அமுக்கி வைக்கப்பட்ட ;கல்வி,கேள்வி ,வாழும் உரிமை என மறுக்கப்பட்ட கடைநிலை மக்களை உடை,உணவு ,கல்வி கொடுத்து மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ வைத்த ஏசுவிற்கும் ,அவரது பாவப்பட்ட ஒரிசா வாழ் மந்தைகளுக்கும் பாரத தேசம் செய்திட்ட நன்றிக்கடனை என்னவென்று சொல்லிட!!!!..............

செவ்வாய், 23 டிசம்பர், 2008

இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும் சூழலில், தற்பொழுது அனைவரின் கவனமும் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து அறிந்து கொள்வதில் நிலை கொண்டுள்ளது.
முதலில் சிமியின் மற்றொரு பதிப்பான டெக்கான் முஹாஜிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்பு தான் இத்தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது என எப்பொழுதும் போல் மேல்மட்டத்தில் ஹிந்த்துவாவின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்ட மின்மடலை நம்பி அலறிய இந்திய உளவுத்துறை பின்னர் படிப்படியாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, லஷ்கரே தொய்பா, அல் காயிதா என ஊகங்களை வாரி வீசி வருகிறது.
இந்நிலையில் இத்தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் நேரில் இருந்து அனைத்தையும் கவனித்த பிரபல பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரீஷ் மிஸ்ரா, அமிழ்ந்துக் கிடக்கும் உண்மைகளின் முடிச்சுகளை அவரது ஆழ்ந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்கிறார்.
இந்திய உளவுத்துறையும் அரசும் வெறுமனே யூகங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எப்பொழுதும் போல் உண்மையான குற்றவாளிகளைக் கோட்டைவிடுவதை விடுத்து, நேர்மையாக இச்சந்தேகங்களின் பாலும் தனது கவனத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.
இரண்டாயிரம் பக்கங்களையும் இரண்டு பாகங்களைக் கொண்ட டாக்டர். அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சமீபத்திய நூலான "War of Civilizations: India AD 1857" கடந்த மார்ச் 2008 இல் இந்திய துணை குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....
அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.
கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.
எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"
இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர். .....CLICK TO READ
ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.
அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'
Error! Filename not specified.
மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார். ..CLICK TO READஇதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.
இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார்.
அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.
நன்றி: தட்ஸ் தமிழ்
மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய CLICK TO READ.பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.
இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!
இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே!
எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.
மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது.
நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர்.
ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.
ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது.
மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.
அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது.
இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...
பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.
அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.
முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும்.
இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள்.
முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.
வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.
இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.
தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம். இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.
பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!

நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.- அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)

திங்கள், 22 டிசம்பர், 2008

தமிழீழமும் தமிழகமும்

தமிழீழமும் தமிழகமும்
‘பூம்புணல்’ வலைப்பூ மிக அருமையாக உள்ளது. ஜெயமோகனுக்கு அளிக்கப்பட்டுள்ள எதிர்வினை மிக அருமை! சில இடங்களில் வார்த்தைகளின் கடுமையைக் குறைத்திருக்கலாம்.
தமிழகத்தில் இன்று தமிழீழம் குறித்துப் பேசும் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். வெளிப்படையாக ஈழத்தில் பாதிக்கப்படுவோர் ‘இந்துக்கள்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். ஹிந்துத்துவாவும் தமிழீழமும் தமிழ்த் தேசியமும் கைகோர்க்கும் அபாய மேகம் சூழ்ந்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் தலைமையில் ஒரு குழு எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்து, போர் நிறுத்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
இதை ஃபாசிஸ இந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும் சமூக நல ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கருத்தியலாளர்கள் அனைவரும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர். விடுதலைப்புலிகளை காக்கவே அரசியல் தலைவர்கள் கூக்குரலிடுவதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். இந்த அபாயம் பெரியார் பிறந்த இம்மண்ணில் தடம் பதியாமல் காப்பது ஃபாசிஸத்தை எதிர்க்கும் ஒவ்வொரு சமூக நல ஆர்வலர்களின் கடமையாகும். இது குறித்த தெரிவான படைப்புகள் தகுந்த தரவுகளுடனும் வரலாற்றுப் பின்னணியுடனும் பூம்புணலில் வெளிக்கொணர வேண்டும் என விரும்புகிறேன்.
வாழ்த்துகளுடன்
தமிழ்க் குடிமகன்
மதுரை

சனி, 20 டிசம்பர், 2008

பாகிஸ்தானின் கைக்கூலிகளும் ,பாசிச நேசர்களும்

மும்பை பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து தேசமே ஒரு குரலில் பேசும்போது பா.ஜ.க. மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகின்றது. டிசம்பர் ௨0 தேதியிட்ட த ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை பாருங்கள்.
"ஒன்பது வருடங்களுக்கு முன்னர்பா.ஜ.க. ஆட்சியில் நடந்த விமான கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கந்தகாருக்கு அழைத்து சென்று ஒப்படைத்தது போல் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் அதே மாதிரி அப்பயங்கர வாதிகளை அழைத்து செல்வேன் என பா.ஜ.க. வின் மூத்த தலைவரும் அன்று பயங்கர வாதிகளை அழைத்துசென்றவருமான ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். அவரின் இக்கருத்தை பா.ஜ.க.வின் மற்றொரு தலைவர் கோபிநாத் முண்டே ஆதரித்தார் "
ஆனால் மும்பையில் ஐயத்துக்கிடமான வகையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கறேவின் கொலை தொடர்பாக விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நடுவண் அமைச்சர ஏ,ஆர்.அந்துலே பா.ஜ.க., சிவசேனை போன்ற பாசிச கட்சிகளினால் குறிவைக்கப்படுவது மட்டுமில்லாமல் அவரின் மீது பாகிஸ்தானின் கைக்கூலி என சேறு வாரி இறைக்கப்படுகிறது . அவரும் தனது பதவி விலகல் கடிதத்தை மன்மோகன் சிங்குக்குக்கு அனுப்பிவிட்டார். காங்கிரஸ் மேலிடமோ அந்துலேயின் கருத்துக்கள் குறித்து அதிருப்தியை அடைந்துள்ளது. ஆனால் விமான கடத்தலை ஊக்குவிக்கும் பா.ஜ.க. வின் பாலோ மிக மென்மையாக நடந்துகொள்கிறது.
பாசிச எதிர்ப்பு உணர்வலைகளின் மூலம் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தற்சமயம் பா.ஜ.க. இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இழுபடுகின்றது. நிதித்துறையில் தோல்வி அடைந்த ப.சிதம்பரம் தனக்கு முந்தி உள்துறை பொறுப்பு வகித்த சிவராஜ் பாட்டீலை விட பாசிசத்திற்கு நெருக்கமானவராக காட்சி தருகிறார். போடா ,தடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த ஆள் தூக்கி சட்டமானது துப்பாக்கி, குண்டு மூலம் நடத்தப்படும் ஆள்கொலைகளையும்
மட்டுமே பயங்கரவாதம் என கணக்கில் எடுக்கும். ஹிந்து பாசிசம் கொடுவாள், திரிசூலம் ,கத்தி,ஈட்டி கொண்டு செய்யும் கொலைகள் இந்த நவீன ஆள்தூக்கி சட்டம் கண்டுகொள்ளாது.
அக்கிரம்த்திற்கான தெளிவான அழைப்பொலி அல்லவா இது?....
இவர்கள் தேசத்தை எங்கே அழைத்துச்செல்கின்றார்கள்? கையில் இருக்கும் ஆட்சியை தக்கவைக்க
முயலும் காங்கிரஸின் தவிப்பு , அத்வானியின் தலைமை அமைச்சர் பதவி கனவு, ஆர்.எஸ்.எஸ். இன் ஹிந்து ராஜ்ய,அகண்ட பாரத செயல் திட்டம் என பல்முனைத்தாக்குதல்களுக்கிடையே என் அருமை தேசம் கிடந்து தத்தளிக்கிறது. இந்த பதவிப்பித்தும்,தன்னலமும் பிடித்த காங்கிரஸ், பா.ஜ.க.வின் பெயர்களில் மட்டும்தான் மாற்றமே தவிர அமைப்பிலும்,திட்டத்திலும்,அளவிலும் இரண்டுமே ஒன்றுதான். இவர்களுக்கு புரியக்கொடிய மொழி வாக்குச்சீட்டு தான்.
கட்சி மாற்றி மாற்றி வாக்களித்த நிலைகளை மாற்றி இந்த பதவி பித்தர்களை நம் பின்னே வர வைக்கும் சூத்திரம் வகுக்கப்பட வேண்டும் . இதை விட்டு விட்டு காங்கிரஸின் கையாலாகாத துரோக போக்கை எண்ணி கலங்குவதிலும் ,பாசிஸ்டுகளின் சதி திட்டங்களை கண்டு கொதிப்பதிலும் எவ்வித பொருளுமில்லை.

புதன், 17 டிசம்பர், 2008

ஜெயமோகனுக்கு எதிர்வினை!

அன்பார்ந்த பூம்புனல் வாசகர்களுக்கு

குமுதம் - தீராநதி டிசம்பர் 2008 இதழில் அ.மார்க்ஸ் - ஜெயமோகன் இடையிலான மோதல் குறித்து ஒரு வாசகர் தான் அனுப்பிய மடலின் படியை நமக்கனுப்பி வைத்துள்ளார்.அதை அப்படியே இங்கு இடம்பெறச் செய்துள்ளோம்.

ஜெயமோகன் அவர்களுக்கு,

டிசம்பர் 08 தீராநதியில் அ.மார்க்ஸ்-க்கு எதிரான தங்களின் எதிர்முகம் திறந்த கடிதத்தைப் படித்தேன். எனது மறுப்புரைகளையும் விவாதங்களையும் முன்வைப்பதற்கு முன்னர் தங்களுக்கு எனது நன்றிகளை உரித்தாக்க வேண்டியுள்ளது.

நீங்கள் ஒரு நேர்மையான எதிரி. இம்மண்ணின் மரபிற்கும் மைந்தர்களுக்கும் சமாதான சகவாழ்விற்கும் மானுடகுல நேயத்திற்கும் எதிரான உங்களின் பகையை வன்மத்தை நீங்கள் என்றுமே மறைத்ததில்லை; அதற்காக முயன்றதுமில்லை.
இந்திய சமூகத்தை சாதி ரீதியாக பிளவுபடுத்தி அடிமைப்படுத்திய ஆரிய வந்தேறிகளின் பல்முனை ஆயுதங்களில் ஒன்றுதான் புராண இதிகாசங்கள். அத்தகைய பெருமை மிகு ஞர்ன மரபின் - ஊற்றின் நேரடி பின்தோன்றலும் முழு உரிமையாளருமான தாங்கள் 'விஷ்ணுபுரம் பின்தொடரும் நிழலின் குரல் ரப்பர் காடு
என புணைவுகளாக எழுதிக் குவித்துள்ளீர்கள்.
பெருந்தலைவர் காமராஜர் என்ற கரிய மாமனிதர் வந்து தோன்றினாலன்றி கடைத்தேற்றம் கண்டிருக்கவியலாத அளவிற்கு சாதீயப் படிநிலையின் கடைநிலையில் வைத்து நசுக்கப்பட்டிருந்த நாடார் சமூகத்திற்கெதிரான தங்களின் நல்ல பாம்பின் நச்சையொத்த சாதீய வெறுப்பை உமிழ்வதே ரப்பர் புதினம்.
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்மூச்சான இடதுசாரிகளை பின்தொடரும் நிழலின் குரல் மூலம் குறி வைத்தீர்கள்.
விஷ்ணுபுரம் காடு என இரண்டிலும் இன்னும் பிறவற்றிலும் பெண்குலத்தை வெறும் காமப் பொருளாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கும் தங்களின் இழிபார்வையும் அவர்களின் ஒவ்வோர் அங்கத்தையும் மிகவும் மெனக்கெட்டு வர்ணனை செய்யும் தங்களின் ரசிப்புத் திறனையும் பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா என பெரும் தத்துவ விவாதம் பண்ணிய ஆரிய மரபில் வந்துதித்த அருமை மைந்தனின் தத்துவ விசாரமாகவேயன்றி வேறு எப்படி புரிந்துகொள்ள...?
இகபர கவலைகளிலிருந்து விடுபட்டு மோன நிலையில் திளைக்க கங்கைக் கரை சாமியார்கள் கஞ்சா புகையினால் மூளையைக் குளிப்பாட்டுவதைப் போல் இங்கே குமரி முனையிலிருந்துகொண்டு வாழ்வியல் யதார்த்தங்களில் இருந்து பெருந்திரள் மக்களை திசைதிருப்ப இலக்கிய லாஹிரி வஸ்து மூலம் புகைமூட்டம் போடும் ஜெயமோகன் அவர்களே...! புனைவும் புணர்வுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு மார்க்ஸையும் முஸ்லிம்களையும் இடதுசாரிகளையும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் நீங்கள் ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்...?
பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை தனிமைப்படுத்த முயலும் தங்களின் ஒரு கல்லில் இரு மாங்காய் தாக்குதல் உத்தியை நாங்கள் புரியாமலில்லை. முஸ்லிம்களை இறுகிய கூட்டிற்குள் உரைந்து நிற்கும் கற்கால சமூகம் என ஒருபுறம் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும்; முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரிடையே புரிதல் நல்லிணக்கம் ஏற்படுத்த முயலும் அ.மார்க்ஸ் போன்ற முற்போக்கு சனநாயக மனித உரிமைப் போராளிகளை முஸ்லிம்களின் கையாள் என அவதூறு தூற்றுவதுமாக முன்னே போனால் கடிக்கவும் பின்னே வந்தால் உதைக்கவும் செய்யும் வெறிநோய் தாக்கிய குதிரையின் மனநிலையில் உள்ள ஜெயமோகனை நாங்கள் புரியாமலில்லை.
இந்திய முஸ்லிம் சமூகத்தை எங்கும் அசைய விடாமல் வளைத்துச் சுற்றி அழிக்க முயலும் பிரம்மாஸ்திர வியுகத்தின் ஏவுதளம்தான் ஜெயமோகன் என்பதை நாங்கள் நன்றாகவே அறிந்துள்ளோம். பல்வேறு தேசிய இனங்களின் திறந்தவெளி சிறைக்கூடமான நவீன இந்தியாவை பிரிட்டிஷார் அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்தனர் என நன்றியுணர்ச்சியோடு தாங்கள் குறிப்பிடுவதை கொஞ்சம் விளக்கினால் நல்லது.
தனது ஏகாதிபத்திய வல்லாதிக்க கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல் நோக்கிற்காக இந்திய தேசியத்தை கட்டியெழுப்புவது வெள்ளை அந்நியனுக்கு அவசியமாக இருந்தது. அந்த அந்நியனுக்கு முதன்முதலில் காவடி தூக்கிய பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும் அவரின் அடுத்த தலைமுறையான வினாயக தாமோதர சாவர்க்கருக்கும் இளைய தலைமுறையான ஜெயமோகனுக்கும் அந்த அவசியம் இல்லாமல் போய்விடுமா என்ன?
தமிழக இஸ்லாமிய பத்திரிக்கைகள் தாலிபானைத் தூக்கிப் பிடிப்பதாக அபாண்டம் சுமத்தும் ஜெயமோகன் அவர்களே...! உங்களது ஞானப் பீறிடுதல் வடபுலத்திலிருந்து வருகிறது என்பதற்காக எங்களுக்குமா அப்படி இருக்க வேண்டும்? தாலிபான் காலிஸ்தான் என கிசுகிசு செய்திகளைப் பரப்ப வேண்டாம். தாலிபானைப் பற்றி மேலதிக விளக்கத்திற்கு மசூத் அஸாரை ஆப்கானிஸ்தானத்திற்கு அழைத்துச் சென்ற உங்களின் பாஸிஸ பங்காளி ஜஸ்வந்த் சிங்கை தொடர்புகொள்ளவும்.
ஒருவேளை தாலிபான் வகை நீதியும் மொழியும்தான் தங்களுக்குப் பிடித்தமானதும் புரியக்கூடியதாகவும் இருக்குமோ என்னவோ... யாராவது இருந்தால் ஜெயமோகனுக்கு உதவட்டும்!
மாலேகாவ் ஃபாஸிஸ்டுகளுக்கு கருணை மனு போடும் ஜெயமோகனாரே! ஒரு தாக்குதலுக்குத் தேவையான அனைத்து விதமான தூண்டுதல்களையும் முன் ஆயத்தங்களையும் செய்து மிருக பலத்தோடு பாய்பவனும்; தேமேவென்றிருந்தவன் மீது திடுமெனப் பாய்ந்து தாக்கும்போது அவன் ஆற்றும் ஒழுங்கற்ற திட்டமிடப்படாத எதிர்வினையும் சமமாகுமா? நீங்கள் தூக்கிப் பிடிக்கும் மனுநீதி அதை சமமென்றுதானே சொல்லும்? சாஸ்திர சம்மதத்தோடுதான் நீதி பகன்றிருக்கின்றீர்கள். ஆனால் எங்களின் நீதி எளிமையானது. எரிகிறதை உருவினால் கொதிப்பது தானாகவே நிற்கும் என்பதுதான் எங்கள் கிராமத்து சகோதரனின் அரிச்சுவடி.
பேராசிரியர் மார்க்ஸை கந்தமாலுக்கு போகச் சொன்னதன் மூலம் இன்று கந்தமாலில் செய்ததைத்தான் அன்று கஷ்மீரில் செய்தோம் என அனிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் தந்ததற்கும் நன்றி. இனியாவது கஷ்மீர் பற்றிய உண்மைகள் அனைத்தும் முழுத் திரிபுகள் என வாய் தவறியும் சொல்லிட வேண்டாம் என பணிவாய் நினைவுட்டுகின்றோம்.
தங்களின் எதிரி இன்னார் என்று தெரியாமலிருப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது மிகுந்த கழிவிரக்கம் கொள்கிறீர்கள். கசாப்புக் கடைக்காரனின் கரிசனம்தான் எங்களுக்கு நினைவிலாடுகிறது.
காந்திஜியை சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒட்டுமொத்த நாட்டின் எதிரியாக பிரகடனம் செய்து 60 ஆண்டுகள் கழிந்துவிட்டது. 60 வயது என்பது முதிய பருவம். எதையும் எளிதில் மறக்கும் வயது. அந்த மறதிக்கு டிசம்பர் 06 1992இல் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது உங்களின் குருபீடம். முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்த தேசத்தின் எதிரி யார் என்பதை நினைவுட்டிய நாளல்லவா டிசம்பர் 06 1992...?
அப்படியே நாங்கள் எதிரிகளை மறக்க நேர்ந்தாலும் நான் இங்கேதான் இருக்கிறேன் என தவறாமல் உங்களது தூரிகையிலிருந்து உதிரும் துளிகள் எங்களது துயிலைக் கலைத்துக் கொண்டேயல்லவா இருக்கின்றது...?
இறுதியாக உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:
கலாசாலைகளில் கல்வியைக் கற்றீர்களோ இல்லையோ... ஆர்.எஸ்.எஸ்.இன் ஷாகாக்களில் தவறாமல் ஃபாஸிஸத்தைப் பயின்றிருக்கின்றீர்கள். அன்று நீங்கள் அணிந்த புர்ண கணவேஷை இன்னும் கழற்றவில்லை. முன்மாதிரி ஸ்வயம் சேவக்தான் நீங்கள். எனவே உங்களின் ஃபாஸிஸ சேவையைத் தொடருங்கள்!
தலையணை அளவில் எழுதிக் குவித்து கைச்சரக்கு தீர்ந்து போய்விட்ட நிலையில் அடுத்து என்ன எழுதலாம் என மூளையைக் கசக்கும் உங்கள் கஷ்டம் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.
தயைகூர்ந்து உங்களது மக்கள் விரோத எழுத்துக்களை நிறுத்திட வேண்டாம். ஏனெனில் அதில் நம் இருவருக்குமே ஆதாயம் உண்டு.
கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் என்பது முதுமொழி.
தலையை விற்று வயிற்றை நிரப்புதல் என்பது புதுமொழி.
நவீன யுகத்தில் இப்புதுமொழிக்கு உடமைக்காரர் சல்மான் ருஷ்டி. அவரைப் போன்று சர்வதேச அளவில் உயர முடியாமற்போனாலும் குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது அவரின் பேராளராக இருக்கும் உங்கள் விருப்பம் எங்களுக்கு புரியாமலில்லை.
ஒரு ட்ரைதான் பண்ணிப் பாருங்களேன்...
வந்தால் பணமும் புகழும்! போனால் தலைதானே...?
ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - சிறுபான்மை இனத்தின் ஆழ்உறக்க நிலை உங்களின் ஆயுத எழுத்துக்கள் மூலம் மாற நிறையவே பயன்படும்.
நீங்கள் எங்களை விடும் வரை நாங்களும் உங்களை விடுவதாக இல்லை.

தொடர்ந்து மோதுவோம்...

-அப்துல் காதர் ஜியாத்,
காயல்பட்டினம்.

மலையும்,மகாதேவனும் தொடர்ச்சி...

கட்டுரையை மேற்கொண்டு தொடரும்முன் முந்தைய கட்டுரையில் விடுபட்ட சொற்களும்,பிழை திருத்தமும்: . மாமிச மலையோ என்று சொல்லத்தக்க அளவில் ஒருவன் வந்து சேர்ந்தான். பருப்புரை =பரப்புரை. கேடகம் =கேட்கலாம். மலைப்ப்ப்பெயற்சிக்காக =மலைப் பெயர்ச்சிக்காக.

இனி கட்டுரையினுள் நுழைவோம் :

........... நான் தனியொரு ஆளாக இம்மலையை தூக்க வேண்டும் என நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் நானும் அதற்கு தகுந்தமாதிரி ஆயத்தமாகி இருப்பேன். அதற்கு இன்னும் ஆறு மாதம் நான் ஊட்ட உணவை எடுக்க வேண்டும் என்றானாம்.''

ஒற்றாடல் துறையை வலுவாக்கினால்தான் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள முடியும் என சொல்வது மேற்கண்ட கதையில் வரும் பெருந்தீனி மாமிச பிண்டத்தைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது.ஏற்கனவே நம் நாட்டு மக்களின் பெருமளவிலான வரிப்பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் இந்த உளவுத்துறை செயல்படும் விதத்தை அறிந்தால்தான் இவர்களின் வரைமுறையற்ற போக்கை நாம் புரிந்துகொள்ள இயலும்.

நாட்டின் அதி உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் உட்பட அனைத்து துறையினரின் வரவு,செலவு கணக்குகளை தணிக்கை செய்ய கட்டமைப்பு ஒன்று உண்டு. ஆனால் அயல் நாட்டு ,உள் நாட்டு ஒற்றாடல் துறையினருக்கு மட்டும் எந்த தணிக்கையும் இல்லை. அவர்கள் நாடாளுமன்றம் , நீதிமன்றம்,ஊடகம் உட்பட எந்த ஜனநாயக ,நீதி , நிர்வாக அமைப்பிற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. புதியதாக இயற்றப்பட்ட தகவல் அறியும் சட்டத்தின் கீழும் இவர்கள் வர மாட்டார்கள்.

அந்த அளவிற்கு வரைமுறையற்ற அதிகாரம்பெற்ற இவர்களுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசுக்குள் அரசாக இவர்கள் செயல்படுகின்றனர்.நாட்டின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு ஆள்களை நியமனம் செய்யும் முன்னர் இந்த ஒற்றாடல் துறையினரின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்.இந்த வடிகட்டும் முறை காரணமாக எத்தனையோ நேர்மையான ,மன சாட்சிப்படி இயங்கும் அலுவலர்களும், சிறுபான்மையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்கு எதிரான உள்நாட்டு ,வெளிநாட்டு எதிரிகளை கண்காணிக்கவும், தடுக்கவும், முடக்கவும் இவர்களுக்கு முழு அதிகாரமும்,எல்லையில்லா சுதந்திரமும் உண்டு.

ஜனநயாக ,தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் நடுவண்,பிராந்திய அரசுகளின் அதிகாரமும் , ஆயுள்காலமும் ஐந்து வருடங்கள்தான். ஆனால் திரைமறைவில் இந்நாட்டை ஆளும் ஒற்றாடல் துறையினருக்கோ அவர்கள் ரிடயர் ஆகும் வரை அவர்களின் ராஜ்யம்தான் இந்த நாட்டில். இத்தனை ஆற்றலையும் பெற்ற ஒற்றாடல் துறை ஏன் மும்பை தாக்குதலை தடுக்க தவறியது ? என்ற கேள்வி நம் நாட்டு ஊடகங்களில் வெறும் முனகலாகவே முடிந்து விட்டது.

மும்பை தாக்குதலில் உள்துறை அமைச்சர் பதவி விலகி விட்டார். ஆனால் அவரின் கீழ் இயங்கும் ஒற்றர் சீமான்களுக்கு மேல் ஒரு தூசியும் படவில்லை. குடிமக்களையும் ,இந்திரா ,ராஜிவ் காந்தி உள்ளிட்ட நாட்டின் உயர் தலைவர்களின் உயிர்களையும் பாதுகாக்க தவறிய இவர்கள் மேல் ஏன் நடவடிக்கை இல்லை?

இந்த ஒற்றாடல் துறைகளைப்பற்றிய vimarsnakalai

பாருங்கள்:

அரசியல் ஆய்வாளரான ஹரீஷ் கரே :''ஒரு தலைப்பட்ச ,வேறுபாடு உடைய அரசியல் வர்க்கத்தினரின் காரணமாக ஒற்றாடல் துறை உள்ளிட்ட பாதுகாப்பு முகவான்மையினர் அரசியல் தலைவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டிப்படைக்கின்றனர் .நம் நாட்டின் அனைத்து சிக்கல்களுக்கும் பாகிஸ்தானின் ஒற்றாடல் துறையான ஐ.எஸ்.ஐ. தான் காரணம் என்று அரசியல் தலைமையை உளவுத்துறையின் ஒரு பிரிவினர் நம்ப வைத்துள்ளனர். இவ்வாறாக கடந்த பத்தாண்டுகளாக நடந்து வந்துள்ளது.இதனை நம்பி ஏமாறக்கூடிய தலைவர்களோ இந்த ஒற்றாடல் துறையினரை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் செயல்பட கட்டளையிடும் தைரியத்தை எப்போதுமே பெற்றதில்லை''.

முந்திய பா.ஜ.க . அரசியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரஜேஷ் மிஸ்ரா:''' நான் பொறுப்பிலிருந்தபோது ஒற்றாடல் துறையினரிடையே தகுந்த ஒருங்கிணைப்பு இல்லை .சவுத் பிளாக் இல் எனது அனுபவத்தில் ஒற்றாடல் துறையினரிடையே ஒருங்கிணைப்பு என்பதே இல்லை என்பதை நான் கூற இயலும்.அவர்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடையும் நாம் மற்ற வேண்டும்,.ஒற்றாடல் துறையினர் தகவல்களை பரிமாறிக்கொள்வதை வெறுக்கின்றனர்.காரணம் என்னவெனில். ஒன்று தங்களுக்கு தகவல் தருபவர்களை மறைப்பதற்காக அல்லது தங்களது இயலாமையை மறைப்பதற்காக.ஐபி, ரா, ராணுவ தலைவர் ஆகிய மூவரும் ஒன்றாக என்னோடு தகவல்களைபரிமாறி கொள்வர் . ஆனால் அவைகளுக்கிடையே அறவே பேசிக்கொள்ள மாட்டார்கள் '' (சான்று :த ஹிந்து,டிசம்பர் பதிமூன்று.)

மேற்கண்ட மேற்கோள்கள் ஏதோ வழிப்போக்கரின் கருத்துக்கள் அல்ல .அறிவுஜீவியினதும் ,பாசிச அரசின் கீழ் உளவு துறைகளின் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்தவர்களின் பெறுமதிமிக்க ஆய்வும்,அனுபவமும் ஆகும்.

இவை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசும் அதன் புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இருக்கின்ற சுமை போதாது என்று புதிய ஒரு பெருந்தீநிக்காரனை {நடுவண் புலனாய்வு முகமை}உருவாக்க போகிறார்களாம். ஏற்கனவே இருக்ககூடிய ஐ.பி,,ரா போன்ற கையாலாகாத அமைப்புக்கள் கலைக்கப்படுமா? அல்லது கடமை தவறியதற்காக தண்டிக்கவோ அல்லது குறைந்தபட்சம் விசாரணைக்காவது உள்ளாவார்களா ?இவை எதற்கும் விடை கிடிக்கப்போவதில்லை. பாசிசபா.ஜ.க . வின் கொடுங்கோல் ஆட்சிக்கு மாற்று என சொல்லி ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு ,இன்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சூப்பர் பா.ஜ.க. வாக தன்னை உருமாற்றிகொண்டுள்ளது.

திங்கள், 15 டிசம்பர், 2008

மலையும்,மகாதேவனும்

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அரசு, ஊடக வட்டாரங்களில் ஒரு கருத்து வலுவாக உருவாக்கப்படுகிறது.அது என்னவெனில் ஒற்றாடல் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே அது. இத்தகைய ஒரு கருத்தை கேட்கும்போது அது என் சிறிய வயதில் நான் படித்த ஒரு கதையைத்தான் நினைவூட்டுகின்றது .

ஒரு குக்கிராமத்தில் ஒரு பெரும் மலை ஒன்று இருந்தது.அக்கிராம மக்கள் பிற ஊராருடன் தொடர்பு கொள்ள பல மைல் சுற்றி போக வேண்டிய நிலைமை. இத்துன்பத்திலிருந்து விடுபட அவர்களுக்கு தீர்வு சொல்ல யாரும்o இல்லாத ஒரு சூழ்நிலையில் தொலை தூர கிராமத்திலிருந்து மாமிச மலையோ என்றோ சொல்லத்தக்க அளவில்காண்போர் பிரமிக்கத்தக்க அளவில் அவனுடைய உடலமைப்பு இருந்தது. அவன் ஒரு பெருந்தீனிகாரனும் கூட.ஊர் மக்களின் துயரத்தை புரிந்து கொண்ட அவன் ,தன்னை பற்றி பெரிதாக பருப்புரை பண்ணினான்.தன்னை ஒத்த உடல் வலிமை இந்த சுற்று வட்டாரத்தில் யாருக்கும் இல்லை எனவும் பென்னம்பெரிய மலைகளை புரட்டி உள்ளதாகவும் யானைகளை ஒரே கையினால் அடித்து வீழ்த்தியிருப்பதாகவும் தன்னைப்பற்றி பீற்றி கொண்டான். ஊர் வம்பர்கள் சிலரை தன் கை வசமாக்கிகொண்டான் இந்த மாமிச மலை.அவர்களும் இவனயைபற்றி ஆஹா ! ஓஹோ ! என இன்னும் பல பொய்களையும் புனைகதைகளையும் அவிழ்த்து விட மாமிச மலையின் புகழ் அக்கிராமம் முழுக்க பரவியது. பெருவாரியான மக்களும் அதை நம்ப தொடங்கினர்.

ஊரின் முக்கியஸ்தர்கள் சிலர் நமது ஊரின் மலை பிரச்னைக்கு ஒரு தீர்வை இவரிடமே கேடகம் என கருத்து தெரிவிக்க ஊராரும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொன்றனர்.

ஊர் நிர்வாகிகள் அந்த மாமிச மலையிடம் தங்கள் பிரச்சினையை முறையிட்டனர். அவர்களின் முறையீட்டை கேட்ட மாமிச மலை பக பக என நிலமே அதிரும்படி சிரித்த அவன் ஊராரை ஏளனமாக பார்த்து விட்டு என்னால் அதை தீர்க்க முடியும் ,ஆனால் அதற்கான விலையை கொடுக்க உங்களால் முடியாது ,நீங்கள் போகலாம் என்றான். மனங்கலங்கிய ஊரார் அந்த சதைப்பிண்டத்தின் காலில் விழுந்து மன்றாடினர்.

அவர்களின் மன்றாட்டத்தில் மனமிரங்கியஅந்த சதைப்பிண்டம் ஊரின் மலையை தூக்க ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும்.அந்த அவகாசம் எதற்கெனில் அந்த மலையை பெயர்க்க ஊட்டமிகு உணவுகளை நான் உட்கொள்ள வேண்டும் என்றான். சொல்லுங்கள் பலவானே !என்ன உணவு வேண்டும் !என ஒரே குரலில் கேட்க தனது அன்றாடபட்டியலை விபரித்தான்.

இதோ அந்த பட்டியல்:


  • நூறு அவித்த முட்டை.

  • பொறித்த கோழி ஐம்பது.

  • இருபது ஆடுகள்

  • மாட்டிறைச்சி பத்து கிலோ.

  • எழுபது லிட்டர் பால்.

  • பசு நெய் நாற்பது கிலோ.

இந்த பட்டியலை கெட்ட ஊரார் மலைத்தனர். அக்கூட்டத்தில் இருந்த சதைப்பிண்டத்தின் கையாட்கள் ஊராரை உசுப்பேற்றி விட்டு உணவு பட்டியலுக்கு சம்மதிக்க வைத்தனர்.


அன்றாடம் மலையென குவிக்கப்பட்டது இறைச்சி,பால்,நெய் வகைகள். சதைபிண்டமும் அவனது ஊர் வம்பு கையாட்களுக்கும் தின்று தீர்த்தனர்.



இவ்வாறாக ஆறு மாதம் நிறைவு பெற இன்னும் சில நாட்களே எஞ்சி இருக்க மலைப்ப்பெயற்சிக்காக ஊரே விழாக்கோலம் பூண்டது.


அந்த நாளும் வந்தது .தாரை,தப்பட்டை,செண்டை,மேளம் முழங்க மலை மரியாதையை உடன் ஊர்வலமாக அந்த சதைப்பிண்டம் அழைத்து வரப்பட்டான்.


ஊராரை சுற்றுமுற்றும் பார்த்த அந்த பெருந்தீனி சதைப்பிண்டம் எல்லாரும் ஜோராக ஒருமுறை கை தட்டுங்கள் என சொல்ல ஊராரும் அவ்வாறு


செய்தனர். தனது இஷ்ட தெய்வங்களை கண்ணை மூடி வேண்டிக்கொண்ட அவன் நிமிர்ந்து நின்ற அந்த குன்றின் அடிவாரத்தில் தான் இரு கொழுத்த கரங்களையும் வைத்து மூச்சையடக்கி அம்மலையை தூக்க முயற்சித்தான். அம்மலை அசைவதாக இல்லை. பல முறை இங்ஙனம் முயற்சித்து விட்டு ஊராரை பார்த்து கூறினான்,"' நீங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை கொடுத்தால் இம்மலையை தூக்கி விடுவேன் என சொல்ல ஊரார் திரு திரு என முழித்தனர். பலவானே ! எங்களால் முடியாது என்று சொல்லித்தானே உங்களை கூப்பிட்டோம் என பரிதாபமாக விடையிருக்க எகத்தாளமாக சிரித்தான் அந்த சதைப்பிண்டம்.


'(நாளை தொடரும் ............

திங்கள், 8 டிசம்பர், 2008

பா.ஜ..க.படுதோல்வி

தேசிய அரசியலில் : டெல்லி,ராஜஸ்தான்,மிசோரம் ஆகிய இடங்களில் நடந்த சட்ட சபை தேர்தலில் மண்ணை கவ்வியது பா,ஜ.க. காரணம் என்னவெனில் அவர்தளின் பாசிச அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.மும்பை பிணங்களின் மீது நின்று தேர்தல் ஆதாயம் தேட முயன்ற இவர்களின் மரண அரசியல் படு தோல்வி அடைந்துள்ளது .தமிழக அரசியலில. .அதிமுக சி.பி..ஐ. கூட்டு மூலம் தமிழக அரசியல் களத்தில் அனாதையாக நிற்கிறார்கள்.இத்துடன் இவர்கள் சும்மா இருந்து விட மாட்டார்கள்.புதிய வழி முறையை முயற்சிப்பார்கள். அரசியல்,சமூக வானில் இவர்களை ஒடுக்குவதுதான் ஒரே வழி

சனி, 6 டிசம்பர், 2008

இந்தியத் தாயின் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள்! தாக்குதல்களின் மூளை யார்???

கிட்டத்தட்ட 200 பேரை காவுகொண்டிருக்கும் மும்பை பயங்கரவாத தாக்குதலை ஈர நெஞ்சுள்ள எவரும் கண்டிக்காமல் இருக்கவியலாது. இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் எம்மத மொழி இனத்தவராயினும் சரியே...! அவர்களுக்கு ஆக கூடிய தண்டனையை வழங்க வேண்டும்.

1993இலிருந்து நம் தாய்த்திருநாடு குண்டுவெடிப்புகளை சந்தித்து வருகிறது.
1992 பாபரி மஸ்ஜித் இடிப்பும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான எண்ணற்ற இன அழித்தொழிப்பு கலவரங்களும்
1993 மும்பை குண்டுவெடிப்புகளுக்கு வித்திட்டன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. 1993 மும்பை குண்டுவெடிப்பு என்பது முஸ்லிம்களின் எதிர்வினை என ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் அதைத் தொடர்ந்து இன்று வரை நடக்கும் அனைத்து விதமான குண்டுவெடிப்புகளுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தியே ஹிந்துத்துவ பாஸிஸ்டுகள் ஊடகம் அறிவுத்துறை அரசு கட்டமைப்பு போன்றவை பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.
இத்தகைய அபாண்டத்தை நடுநிலையாளர்கள் மதச்சார்பற்ற இடதுசாரிகள் சிறுபான்மையினர் தெஹல்கா உள்ளிட்ட ஒரு சில ஊடகவியலாளர்கள் மறுத்தபோதிலும் வீண் பழி என்ற சேறிறைப்பு தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான் மாலேகாவ் குண்டுவெடிப்பு பல உண்மைகளை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி நிற்கின்றது.
குற்றஞ்சாட்டியவர்களே குற்றவாளிக் கூண்டில்!!
பாஸிஸ நரியின் சாயம் வெளுத்தது!!!
புர்ணா, ஜல்னா, பர்பானி, சம்ஜோதா தொடர்வண்டி, தென்காசி, நான்டேட், கான்புர், மாலேகாவ், செறுவாஞ்சேரி என ஹிந்துத்துவ பாஸிஸ்டுகளின் வெடிகுண்டு கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது.
ஆர்.டி.எக்ஸ்., ராணுவம் என கிணறு தோண்ட ஒன்றன்பின் ஒன்றாக புதம் கிளம்பிய கதையாக கடைசியில் மாலேகாவ் பாஸிஸ்டுகள் தங்களது தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர்களான இந்தர்ஜித் மோகன் பாகவத் போன்றவர்களை கொல்வதற்கு முனைந்த செய்தி மயக்க நிலை சோதனைகள் மூலம் கசியத் துவங்கின.
தையா தக்கா என கூத்தடித்த சங்கபரிவாரம் என்னடா இது...? வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே...! என மூச்சடைத்து நின்றது. இந்நிலையில் மாலேகாவ் குற்றவாளிகளில் ஒருவரான ஜம்மு மடத்தின் சாமியார் திரிவேதியின் மடிக்கணிணி கைப்பற்றப்பட்டு இன்னும் பல பயங்கர சங்கதிகள் வெளிவரும் தருணத்தில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன.
மாலேகாவ் பாஸிஸ குண்டு சதியை தோண்டித் துருவி அம்பலத்திற்குக் கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்.) இன் தலைவர் ஹேமந்த் கர்கரே ஐ.பி.எஸ். உட்பட 3 உயர் அலுவலர்கள் மும்பை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹேமந்த் கர்கரே அவர்கள் 1983ஆம் வருட இந்திய காவல் பணி அணியைச் சார்ந்த நேர்மையான - நீதியான அலுவலர். மும்பை பயங்கரவாத தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்கரே அளித்த ஒரு பேட்டியில் மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் எங்களது 90 சதவிகித நேரத்தை செலவிடுகின்றோம்... இவ்வழக்கை நாங்கள் விசாரணைக்கு எடுத்த பிறகு எனது வீட்டிற்கு மிரட்டல் அழைப்புகள் வருகின்றன என தெரிவித்திருந்தார். இதன் பிறகே அவர் மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்படுகிறார்.

இத்தகைய பின்னணியில் மும்பை பயங்கரவாத தாக்குதல்களைப் பார்க்கும்போதுதான் பயங்கரவாத சதியின் முழு பரிமாணத்தையும் புரிய முடியும்.
நமக்கு முன் எழும் ஐயங்களும், வினாக்களும்:
(1) சங்பரிவாரத்திற்கும் பா..ஜ.க.விற்கும் அரசியல் ரீதியான சரிவுகள் ஏற்படும்போதும் தேர்தல்கள் வரும்போதும் உள்நெருக்கடி வரும்போதும் தவறாமல் நாட்டில் குண்டுகள் வெடிப்பதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதுமாக இருக்கின்றதே... இது எப்படி?
(2) ஏடிஎஸ் தலைவர் கர்கரே உட்பட அதன் 3 அலுவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டவுடன் மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கூச்சலிட்டு கும்மாளமடித்து தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பாஸிஸ்டுகளின் எதிரியான கர்கரேதான் பயங்கரவாதிகளின் எதிரியும் என்று ஆகிறதல்லவா...?

(3) நடுவண் உள்துறை இணையமைச்சர் சிறீபிரகாஷ் ஜெய்ஷ்வால் அளித்துள்ள பேட்டியில் பயங்கரவாத தாக்குதல்கள் வலது சாரி இந்து கட்சிகளினால் உருவாக்கப்பட்ட சதித்திட்டமாகக் கூட இருக்கலாம். கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சற்று முன்னர் பெங்களுருவில் தொடர்குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. அதேபோல்தான் இன்னும் நான்கு மாநிலங்களில் (மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மிசோரம் கஷ்மீர்) தேர்தல் நடக்கவுள்ளது. குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாக ஏடிஎஸ் படையை குறிவைத்து தாக்கிவரும் வேளையில் அப்படையின் 3 மூத்த அலுவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவையனைத்தும் மேற்கொண்டு நடக்கவிருக்கும் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்... (சான்று: டெக்கன் க்ரானிக்கல் - 29.11.2008) என தெரிவித்துள்ளார்.
(4) பொடா சட்டத்தை ஆதரிப்பவரும் ஜாமியா நகர் போலி மோதல் கொலைகளை சரிகண்டவருமான பாஸிஸ சிந்தனை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் நடுவண் உளவு அமைப்பான IB முன்னாள் இயக்குனருமான எம்.கே.நாராயணன் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரான அத்வானியை மாலேகாவ் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தித்து ஆறுதல்படுத்தி உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இவ்விருவரின் சந்திப்பில் பரிமாறப்பட்ட விஷயங்கள் எவை...? படிந்த பேரங்கள் என்னென்ன?? என்பவை வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

(5) முதலில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் 25 பேர் என்றன அதிகார வர்க்கமும் ஊடகங்களும். ஆனால் 9 பேர் கொல்லப்பட்டு ஒருவன் மட்டும் உயிருடன் பிடிபட்டுள்ளான். இதில் பிடிபட்டவனையும் கொல்லப்பட்டவர்களில் ஒருவனையும் மட்டுமே படம் பிடித்துக் காட்டினர். மீதி சடலங்களை ஏன் படமாக வெளியிடவில்லை...? இப்போது 5 தீவிரவாதிகள் தப்பிவிட்டனர் என்கின்றனர். (பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது நடந்த - நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படவும் இல்லை. அவர்களின் உயிர் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆக வந்தது எத்தனை பேர்...? செத்தது எத்தனை பேர்...? தப்பியது எத்தனை பேர்...? தப்பியவர்கள் சென்றது எங்கெங்கே...???
(6) தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தாஜ் ஓபராய் விடுதிகளையும் நரிமன் கட்டடத்தின் உள் அமைப்புகளையும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு பரிச்சயத்திற்கு பல மாதங்கள் தேவைப்படும். அப்படியெனில் அவர்கள் எப்போது இங்கே வந்தார்கள்...? எங்கெல்லாம் தங்கினார்கள்...? என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஏடிஎஸ்-உம் ஐ.பி.-உம் என்ன செய்து கொண்டிருந்தன...???
(7) இப்படியொரு தாக்குதல் நடக்கும் என நடுவண் மற்றும் மாநில அரசை ஏடிஎஸ்வும் ஐபி-யும் எச்சரித்திருந்தன. ஆனால் தொடர்புடையவர்கள்தான் அலட்சியமாக இருந்துவிட்டனர் என திட்டமிட்டே ஒரு செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தியில் சதிக்கும்பலின் செயற்கைக் கோள் வழி செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதின் அடிப்படையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்ததாகக் கூறும் நடுவண் அரசின் ஒற்றாடல் அமைப்புகள் இந்த சதிக்கும்பல் இந்தியாவில் தங்கிய இடத்தை தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் அறிந்தும் மறைத்தது ஏன்?
(8) மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவ சதிக்கும்பலுக்கு பயிற்சியளித்ததில் முன்னாள் - இன்னாள் ராணுவ அலுவலர்களுடன் ஐபி-யைச் சார்ந்த உளவு அலுவலரும் பயிற்சியளித்திருக்கின்றார். ராணுவ அலுவலர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் முதலில் அடிபட்ட அந்த ஐபி உயரதிகாரியின் பெயரை அப்படியே அமுக்கிவிட்டனர். இதை பாஸிஸ சிந்தனை சிற்பியான சோ தனது துக்ளக் இதழில் பின்வருமாறு சரிகண்டுள்ளார்:

(மாலேகாவ் விஷயத்தில்) ...............அதிகாரிகளில் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறையினருக்கு வகுப்பு நடத்தியவர் என்று ஒரு செய்தி கூறுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க எதிர்பயங்கரவாத முறையை உலக நாடுகள் சில கடைப்பிடிப்பதாகக் கூறப்படுவதுண்டு. அம்மாதிரி ஏதாவது நடந்தால் அது வெளியே தெரியாத வரைதான் நாட்டுக்கு நல்லது. அது பகிரங்கப்படுத்தப்படுவதே ஒரு மிகப்பெரிய தவறு............ (26.11.2008 துக்ளக்)
ராணுவம் நீதிமன்றம் நாடாளுமன்றம் என அனைத்தையும் விட உளவுத்துறைதான் பாஸிஸ்டுகளின் தலைமைப் பீடம் முதன்மைச் செயல்களம் இறுதிப் புகலிடம் என்பதயல்லவா இது நிரூபிக்கின்றது...?
(9) நாடாளுமன்றம் நீதிமன்றம் கணக்கு தணிக்கைக் குழு என சனநாயக நாட்டின் எந்தவொரு நிர்வாக அமைப்பிற்கும் விடை சொல்லத் தேவையில்லாத வரைமுறையற்ற தணிக்கைக்கு உட்படாத பண வரவு - செலவு செய்யும் RAW, ஐ.பி. என்ற நடுவண் ஒற்றாடல் அமைப்புகளின் ஓய்வுபெற்ற அலுவலர்களான பி.ராமன், மலோய் கிருஷ்ண தார் என்போரும் இன்னபிறரும் தங்களது பாஸிஸ பாசத்தையும், சார்பையும் என்றுமே மறைத்ததில்லை. பாஸிஸ்டுகளுக்கு மந்திராலோசனை தேர்தல் வெற்றிக்கு உதவுதல் என தங்களது பதவிக்காலத்திலும் அதற்குப் பின்னரும் இவர்கள் உதவியுள்ளனர்.
இப்படி மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து - மொழி, இன, மத சிறுபான்மையினரை வேட்டையாடியும், பாஸிஸ்டுகளுக்கு முழு ஆதரவுக்கரம் நீட்டியும் வரும் இந்த உளவுத் துறைகள்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்களை பாஸிஸ்டுகளுடன் இணைந்து நடத்தியிருக்க அத்தனை வாய்ப்புகளும் உள்ளன.
பொதுவாகவே எதிரி நாடுகளிலும் எதிர்போராளி முகாம்களிலும் அரச உளவுத்துறையினர் இரட்டை முகவர்கள் என்றழைக்கப்படும் தங்களது கையாட்களை பதியம் போட்டு வைத்திருப்பார்கள். தாங்கள் ஏதாவது குற்றத்தில் - சிக்கலில் மாட்டும்போது அவற்றிலிருந்து தப்பிக்க இந்த இரட்டை முகவர்கள் மூலம் படுபயங்கரமான தாக்குதல்களைத் தூண்டிவிடுவர்.

குயுக்திக்கும் குறுமதிக்கும் நரித்தந்திரத்திற்கும் அழிவு வேலைகளுக்கும் மூல பிறப்பிடமும் தலைமைக் குருபீடமும் ராஜகுருவுமான அர்த்த சாஸ்திப் புகழ் கவ்டில்யன் என்றழைக்கப்படும் சாணக்கியனின் ஞான உபதேசங்களின் ஒட்டுமொத்த சொந்தக்காரர்களும் அதன் வழி தப்பாமல் நடக்கும் பின்தோன்றல்களுமான இந்திய உளவுத்துறையினர் தங்களது பொறுப்புகளையும் உடந்தையையும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யைக் காரணங்காட்டி அவ்வளவு எளிதில் தப்பித்துவிட இயலாது.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீதிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சற்றும் குறைந்ததல்ல இவர்களின் மீதான குற்றச்சாட்டு!

(10) மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த அடுத்த நாளே புதுதில்லி செய்தித்தாள்களில் பயங்கரவாதத்துடன் போரிட பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்... என்ற முழுபக்க விளம்பரம் வெளிவந்தது. பயங்கரவாதம் பாஸிஸம் மக்களின் பிணக்குவியல் இவற்றின் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் பதவிப் பித்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்...?
(11) மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் கழித்து பெரும் மக்கள் திரளடங்கிய அஞ்சலி கூட்டம் மும்பை தாஜ் விடுதியருகில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை முழக்கமான பாரத் மாதா கீ ஜெய்! என்ற கூக்குரல் எழுப்பப்பட்டதுடன் பாஸிஸ்டுகளின் நெடுநாளைய கோரிக்கையான பொது சிவில் சட்டம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து முழுமையாகப் பலனடையத் துடிப்பது யார்...? என்பதிலிருந்தே பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையும் அவர்கள்தான் என்பதற்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
பாஸிஸ்டுகள் செய்த - செய்யப்போகிற அறுவடைகள்:
80 வயதைக் கடந்த - படுகிழவரான அத்வானிக்கு தலைமையமைச்சர் பதவி இருக்கையின் மீது இளமை மாறாத குறியும் அத்துடன் கூடவே கொலை வெறியும்தான்! சற்றொப்ப சில மாதங்களே தொலைவிலுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடத் துடிக்கும் அத்வானிக் கும்பல் அதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு வரலாறே சாட்சி!
25.11.2008 செவ்வாய்க்கிழமை மாலை வரை மாலேகாவ் குண்டுவெடிப்புகளை விசாரணை செய்த ஒரே குற்றத்திற்காக யுவுளு படையினரைக் குறைகூறி வந்த பாஸிஸ பரிவாரம் அன்றிரவு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பலியான யுவுளு அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளித்தது. நேர்மையான அலுவலர் கர்கரேயின் அடியொற்றி அவரது அன்பு மனைவி பாஸிஸ்டுகளின் இந்த இழிபரிசை வாங்க மறுத்துவிட்டார்.
சாம - பேத - தான - தண்ட என்ற நாற்சூத்திரத்தில் முதலில் தண்டத்தையும் பின்னர் தானத்தையும் நீட்டுகிறது பாஸிஸம். தன்னை அம்பலப்படுத்த முயன்ற யுவுளு இன் மூத்த அலுவலர்களுக்கு குண்டுகளையும் அவர்களின் குடும்பத்தினருக்கு பண முடிப்புகளையும் வழங்குவதன் மூலம் பணியிலிருக்கும் ஏனைய யுவுளு படையினருக்கும் இந்திய காவல் - நீதி கட்டுமானத்திற்கும் பாஸிஸ பரிவாரம் ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது: எங்களை சீண்டினால் குண்டுதான் கிடைக்கும். அடங்கிக் கிடந்தால் பணமுடிப்பைப் பரிசாகத் தருவோம்...

மாலேகாவ் குண்டுவெடிப்பு விசாரணையில் ஏடிஎஸ் உடைய முழு நேரமும் செலவிடப்பட்டதால்தான் மும்பை பயங்கரவாத தாக்குதல்களை அவர்களால் தடுக்கவியலாமற்போயிற்று... என அத்வானியும் அவரது ஆஸ்தான குரு துக்ளக் சோவும் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.
இவர்களின் இந்த அறிக்கைகள் மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் காரணத்தையும் பின்னணியையும் யாருக்கும் புரியும் வண்ணம் எளிதாக சுட்டி நிற்கின்றன.
இந்த மும்பை தாக்குதல்களின் மூலம் பாஸிஸ்டுகள் சாதித்தவை:
  • மாலேகாவ் உட்பட முழு தேசத்தையே கரிக்கக் கூடிய பாஸிஸ்டுகளின் நவீன ஆயுதத் திறன் பற்றிய விவாதம் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது.
  • ஒரிஸ்ஸா கர்நாடகம் கேரளம் தொடங்கி கிறிஸ்துவர்களுக்கு எதிராக கொலை கொள்ளை பாலியல் வன்முறை தீயிடல் விரட்டுதல் என இனத்தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்க பிரிட்டன் நாடுகளின் வெறுப்பை சம்பாதித்த பாஸிஸ பரிவாரம் அதை மடைமாற்ற மும்பை பயங்கரவாதிகள் மூலம் அமெரிக்க பிரிட்டன் குடிமக்களைக் கொன்றுவிட்டு பழியை பகைநாடு பாகிஸ்தான் மீது வெற்றிகரமாகத் திருப்பிவிட்டது.
  • தேர்தலை சந்திக்கும் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இதன் மூலம் பா.ஜ.க. முயற்சித்துள்ளது.
  • மாலேகாவ் ஒரிஸ்ஸா சம்பவங்களைத் தொடர்ந்து விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தள் போன்ற பாஸிஸ படையணியை தடை செய்யும் கோரிக்கை நாடு முழுக்க வலுவாக எழுந்தது. மும்பை புரளியில் அதுவும் வெற்றிகரமாக கடாசப்பட்டுவிட்டது.
  • இந்தியா விடுதலையடைந்து 60 ஆண்டுகளாகின்றன. நம் தாயகத்தின் மீதான முதல் பயங்கரவாத பாஸிஸ தாக்குதல் - தேசத்தந்தை காந்தியின் படுகொலையாகும். அதன் பிறகு பெரும் நிகழ்வுகளாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குஜராத் இன அழித்தொழிப்பு தற்சமயம் மும்பை பயங்கரவாத தாக்குதலும் நடைபெற்றிருக்கின்றன.
  • இந்திய திருநாட்டின் சனநாயகம் கருத்துரிமை நல்லிணக்கம் நீதி நிர்வாகம் குடிமைச் சமூகம் என அனைத்தின் மீதுமான முழு அளவிலான போர் அறைகூவலை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஸிஸ பரிவாரம். இந்த பாஸிஸ மூர்க்கத்தனத்தை தற்போது நடைமுறையிலிருக்கும் சனநாயக நாடாளுமன்ற நீதி நிர்வாக நடைமுறைகளினால் தடுத்திட இயலவில்லை என்பதும் ஹிந்துத்துவ பாஸிஸ்டுகளுக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.

    நிறைவாக
    ...
    நம் தாய்த்திருநாடு மெல்ல பாஸிஸத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு தூண்டிவிட்டு பின்னர் அதையே காரணங்காட்டி தடா பொடா போன்ற ஆள்தூக்கி சட்டங்களை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஒரு கெடுபிடி அரசை நாடு முழுக்க நிறுவும் ஒரு பாஸிஸ யுக்தி வெற்றிகரமாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது.
    இந்த நகர்வைச் சுமூகமாக்கும் ஒரு யுக்திதான் கேள்விகள் கேட்காதே... என்ற ஒற்றை வரி ஹிதோபதேசம் சனாதன அறிவுஜீவிகளிடமிருந்தும் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் தொற்றியிருக்கின்ற அவர்களின் கைத்தடிகளிடமிருந்தும் உரக்க வெளிப்படுகின்றது.

    கேள்விகள்
    கேட்க முடிகின்ற விடை சொல்லக் கடமைப்பட்ட வெளிப்படையான ஓர் ஆட்சிமுறை என்பது சனநாயகம் என்ற அருமை தத்துவம் நமக்களித்த அரிய கொடை.

    ஒரு
    வளமான குடிமைச் சமூகத்தின் இருப்புக்கும் இயக்கத்திற்கும் வெளிப்படையான தன்மை என்பது இன்றியமையாததாகும். ஒரு நிலப்பரப்பில் பாஸிஸம் தழைக்க வேண்டுமென்றால் அது மேற்சொன்ன - வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தின் அனைத்து உன்னத உயிர்நாடி அம்சங்களையும் பிடித்து நசுக்கி அழிக்க முயலும்.

    அன்று தேசத்தந்தையைக் கொன்றவர்கள் இன்று முழு தேசத்தையே கொல்லப் பார்க்கின்றார்கள்...

புதன், 3 டிசம்பர், 2008

அன்பார்ந்த வலைத்தள நேயர்களே !
உங்களனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழில் எண்ணற்ற வலைத்தளங்கள் இருந்தாலும் நமது இந்த வலைத்தளம் இந்திய - இலங்கை இணைப்புதளமாக அமைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய - இலங்கை என பொத்தாம் பொதுவாக சொல்வதை விட தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாகிய தமிழக - இலங்கை தமிழ் பேசும் மக்களின் சமூக பண்பாட்டு அரசியல் தளங்களை பேசும் இணைக்கும் உறவுப்பாலமாக விளங்க வேண்டும் என்பதே எம் நோக்கம்.
நேயர்கள் தங்களது ஆக்கங்களை செய்திகள் கட்டுரைகள் திறனாய்வு கட்டுரைகள் நூல் திரை அறிமுகங்கள் & விமர்சனங்கள் கவிதைகள் என பதிவு செய்யலாம்.
உடன்பாடான, மறுப்பான விவாதங்களும் ஆக்கங்கள் மீதான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.
நேயர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!
கருத்து சுதந்திரத்தையும் கூர்மையான காரசாரமான ஆக்கங்களையும் விமர்சனங்களையும் நாம் வரவேற்கும் அதே வேளையில் ஒழுக்க விழுமியங்களை சிதைக்கின்ற ஆக்கங்களை தவிர்க்குமாறு பணிவாய் வேண்டுகிறோம்.
எம்மை தொடர்பு கொள்ள
ratnamraja83@yahoo.com